எச்சரிக்கை
சுத்தமானது, சுகாதாரமானது, தரச்சான்றிதல் பெற்றது என்று கவர்ச்சிகரமானவாசகங்களோடு வரும் அத்தனை பிரபலமான நிறுவனங்களின் தேன்பாட்டில்களிலும் ரசாயனம் கலந்துள்ளது என்ற அபாயச்சங்கை ஊதியுள்ளதுஅறிவியல் ஆய்வுக்கூடம். டெல்லியில் விற்பனையான தேன் பாட்டிலைமாதிரிக்கு எடுத்து சோதித்துப் பார்த்த உணவு ஆய்வாளர்கள் தேள் கொட்டினமாதிரி அதிர்ந்து போயிருக்கிறார்கள். அந்த தேன் பாட்டிலில் கலந்துள்ள ரசாயனப்பொருட்கள் ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு வைக்கும் வெடிகுண்டுகள் என்றஉண்மையை போட்டு உடைத்துள்ளார்கள். ரத்தம், இதயம், கல்லீரல், சிறுநீரகம், எலும்பு என்று எந்த ஒரு உறுப்பையும் பதம் பார்க்க வல்ல கெமிக்கல் சங்கதிகள்அந்த தேன் பாட்டிலுக்குள் அடக்கம். தேன் ஒரு நல்ல மருந்து என்று சொன்னகாலம் உண்டு. இன்று அந்த தேனையும் நஞ்சாக்கி விட்டார்கள், கோட்டு போட்டவியாபார நிறுவனங்கள். பிறந்த குழந்தைக்கு தேன் வைக்க ஆசைப்படும்பெரியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
-சொன்னவர் நாவலாசிரியர் ராஜேஷ் குமார் க்ரைம் நாவலில்..