செவ்வாய், 18 ஜனவரி, 2011

என் சோகம்
என் வாழ்க்கையின் மிக கடினமான கால கட்டத்தை இப்போது சந்தித்திருக்கிறேன். என் தந்தை இறந்து விட்டார். அவரது வயது 48. என் உயிரில் பாதி போனது போன்ற உணர்வு என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது. அவர் இறந்த நாள்(09.01.2011) என் வாழ்வின் மறக்க முடியாத ரணமாக மாறி விட்டது.
என் தந்தையாக மட்டுமன்றி ஒரு மிகச் சிறந்த பண்பாளரகவும் திகழ்ந்தவர். இறுதி வரை யாரிடமும் எந்த கெட்ட பெயரும் எடுக்காமல் வாழ்ந்தவர். அவர் தற்போது என்னுடன் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. என்னை ஆறுதல் படுத்தி ஊக்கமூட்டிய சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.