சனி, 27 பிப்ரவரி, 2010

தங்க ரகசியம்
உலக நாடுகளிலேயே மிக அதிகமாக தங்கத்தை பயன்படுத்துகிற நாடாக நமதுநாடு திகழ்கிறது. IMF என்று அழைக்கப்படும் சர்வதேச நிதி நிறுவனம் மற்றும்அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளிடம் தங்கம் கையிருப்பு அதிகமாகஇருக்கிறது. அதே நேரத்தில் நமது நாட்டில் சாதாரண மனிதர்களிடம் கூட தங்கம்இருக்கிறது. இதனால் தங்கம் கையிருப்பு அதிகம் வைத்திருக்கின்ற மக்களைகொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. பெரும்பாலும் 22 காரட் தங்கத்தில்தான் விதவிதமான ஆபரணங்கள்செய்யப்படுகின்றன. தங்கத்தின் உற்பத்தி குறைந்த காலத்திலோ அல்லதுகிராக்கி அதிகம் ஏற்பட்டு சப்ளை குறைந்து போகும் நிலையில்தான் 8,9,10,12,14 காரட் தங்கத்தில் ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. நாம் உபகொயப் படுத்தும் உலோகம் எதுவானாலும் அதன் மதிப்பு என்பது 99.99 அல்லது 999 ஆகும். மீதி வேறு உலோகத்தின் கலவைதான். தங்கமும் இதற்குவிதிவிலக்கு இல்லை. அதனால்தான் அரசு வெளியிடுகிற தங்க பாளம், தங்கபிஸ்கட்டின் மீது 99.99 அல்லது 999 என குறிப்பிடப்படுகிறது. மீதி கலவைஉலோகம். இன்னொரு உலோகத்தை தங்கத்துடன் கலக்கும்போதுதான் அதைஉருக்கி நீட்டி தகடுகளாக்கி கண்கவரும் ஆபரனன்களாக மாற்ற முடிகிறது.
தங்கம் பற்றிய முக்கிய தகவல்கள்:
  1. தங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட தரம் 24 காரட்.
  2. அமெரிக்க டாலரின் மதிப்பில் வீழ்ச்சி, உள்நாட்டில் பண வீக்கம் அதிகரிப்பு, பங்குசந்தையில் சரிவு ஏற்படுகிறபோது தங்கம் விலை சர்ரென்று ஏறுமுகம் காணும்.
  3. அட்சய திருதியை நாளில்-அதாவது சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம்நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கை.
  4. பத்தரை மாற்று தங்கம் என 24 காரட் தங்கத்தை போற்றினாலும் அது ஆபரணம்செய்ய உதவாது. மாற்று உலோகம் கலந்தால்தான் தங்கத்துக்கு சிறப்பு.
  5. தங்கத்துக்கு சிறப்பான மருத்துவ குணங்கள் உண்டு. வலது கை விரல்களில்தங்கம் அணிந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: