டில்லி செங்கோட்டை
டில்லி என்றதும் நினைவுக்கு வருவது செங்கோட்டைதான். இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக் கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் முஹலாய மன்னர் ஷாஜகான்.
தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜகனாபாத்திற்கு(தற்போதைய பழைய டில்லி) ஷாஜகான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக்கட்டி முடிக்க 1638-48 வரை 10 ஆண்டுகள் ஆனது. செலவிட்ட தொகைஅப்போதைய மதிப்பிற்கு ஒரு கோடி ரூபாய். யமுனை நதிக் கரையில் ஒப்பிலாஅழகுடன் நிற்கும் செங்கோட்டை பாரசீக, ஐரோப்பிய, இந்தியக் கட்டடக்கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சர்யப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும்போற்றப்படுகிறது. டில்லிகேட், லாகூர் கேட் என இரு பெரும் நுழைவாயில்கள்உள்ளன. கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றிஅந்தப்புரங்களிலும் கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. திவான்-இ-ஆம்எனப்படும் தர்பார் மண்டபம் பொது மக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில்அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காகஅமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
ஜெனானா என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மகால், ரங் மகால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்டநீரூற்று புதுமையின் பதிப்பு. அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்டமோதிமஷ்திஜ் எனப்படும் பியர்ல் மஷ்திஜ் எனப்படும்(முத்து மசுதி) முழுவதும்சலவைக்கல்லால் கட்டப்பட்டதாகும்.
இவை தவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த நகார்-இ-பெஹிஸ்ட் என்றபகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும்வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி கனவுகளுக்கும்கற்பனைகளுக்கும் கூட கால்வாய் வெட்டி நனவாகிய முஹலாய மன்னர்கள் இதை சொர்க்கத்தின் நீரோடை என்றும் அழைத்துவந்தனர். நீரோடையை இன்றும்காணலாம். செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜகான் என்றாலும் அவருக்குப்பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது கண்டோன்மேன்ட்டாக(ராணுவ முகாம் மற்றும்குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது.