வியாழன், 23 டிசம்பர், 2010

எச்சரிக்கை
சுத்தமானது, சுகாதாரமானது, தரச்சான்றிதல் பெற்றது என்று கவர்ச்சிகரமானவாசகங்களோடு வரும் அத்தனை பிரபலமான நிறுவனங்களின் தேன்பாட்டில்களிலும் ரசாயனம் கலந்துள்ளது என்ற அபாயச்சங்கை ஊதியுள்ளதுஅறிவியல் ஆய்வுக்கூடம். டெல்லியில் விற்பனையான தேன் பாட்டிலைமாதிரிக்கு எடுத்து சோதித்துப் பார்த்த உணவு ஆய்வாளர்கள் தேள் கொட்டினமாதிரி அதிர்ந்து போயிருக்கிறார்கள். அந்த தேன் பாட்டிலில் கலந்துள்ள ரசாயனப்பொருட்கள் ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு வைக்கும் வெடிகுண்டுகள் என்றஉண்மையை போட்டு உடைத்துள்ளார்கள். ரத்தம், இதயம், கல்லீரல், சிறுநீரகம், எலும்பு என்று எந்த ஒரு உறுப்பையும் பதம் பார்க்க வல்ல கெமிக்கல் சங்கதிகள்அந்த தேன் பாட்டிலுக்குள் அடக்கம். தேன் ஒரு நல்ல மருந்து என்று சொன்னகாலம் உண்டு. இன்று அந்த தேனையும் நஞ்சாக்கி விட்டார்கள், கோட்டு போட்டவியாபார நிறுவனங்கள். பிறந்த குழந்தைக்கு தேன் வைக்க ஆசைப்படும்பெரியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
-சொன்னவர் நாவலாசிரியர் ராஜேஷ் குமார் க்ரைம் நாவலில்..

சனி, 6 நவம்பர், 2010

நட்பு
புரியாத நட்புக்கு
அருகில் இருந்தும்
பயனில்லை!
புரிந்து கொண்ட
நட்புக்கு பிரிவு
ஒரு தூரமில்லை!
மனிதா.. மனிதா!
கணினியில்
கால் பதித்து
காற்றினில்
நடக்கின்றாய்
களவு
போனது
மனித நேயம்!
வியக்கத்தக்க
பல சாதனைகளை
விஞ்ஞானத்தில்
படைத்தாய்
மறந்து போனது
மனித நேயம்!
பால் வெளியில்
பாலம் கட்டினாய்
மனதிற்கு
சுவர் கட்டிவிட்டாய்
தடுக்கப்பட்டது
மனித நேயம்!
மனிதனின் சாதனை
மானுடம் வென்றது
மனிதருள் வேதனை
சாதி மத சாக்காட்டில்
புதைந்து போனது
மனித நேயம்!

வெள்ளி, 18 ஜூன், 2010

ராவணன் விமர்சனம்
இசைப் புயலின் இன்னொரு அவதாரம். மேல்தட்டு மக்களின் அதிகார வெறியை குறிப்பாகபோலீசாரின் வெறியை காட்டியிருக்கும் படம். மணிரத்னத்தின் முந்தய படங்கள்வரிசையில்அடுத்த மெகா ஹிட். புராணக் கதைகளை இவ்வளவு தைரியமாக படமாக்குவதில் மணிரத்தினத்திற்கு நிகர் எவரும் கிடையாது. விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனிபோட்டிருப்பவர் மணிரத்னம் மட்டுமே. பழைய ராமாயணத்தை மாடர்னாகமாற்றியிருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க காட்டுக்குள்எடுக்கப்பட்டிருப்பதால் கேமிரா விளையாடியிருக்கிறது. ஐஸ்வர்யாராயை மிகஅழகாகக் காட்டியிருக்கிறார் கேமிரா மேன். காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்தில்ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்டிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். கதைப்படி திருநெல்வேலியின் பெரிய தாதா வீரய்யா என்னும் வீரா. திருநெல்வேலியின் அனைத்து காவல் நிலையங்களிலும் சுமார் 163 வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளி. சிங்கராசு எனும் அண்ணன் மற்றும்சர்க்கரை எனும் தம்பி ஆகியோருடன் குற்றங்கள் புரிகிறான். அந்த சமயத்தில்திருநெல்வேலிக்கு புதியதாக என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் தேவ் ஆனந்த்எஸ்.பி.யாக பொறுப்பேற்கிறார். அவருடைய மனைவி ராகினி. வீராவின்தங்கையின் திருமணத்தின்போது அங்கு வரும் போலீசார் வீராவை சுட்டுவிட்டுஅவர் தங்கையை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விடுகின்றனர். அவமானம் தாங்காமல் தங்கை தற்கொலை செய்து கொள்ள பலிவாங்குவதற்காக போலீஸ் ஆபீசரின் மனைவியை கடத்துகிறார் வீரா. கடும்முயற்சிக்குப்பின் மனைவியை மீற்கிறார். அத்துடன் நில்லாமல் மனைவியின்மீது சந்தேகப்பட அவர் கோபம் கொண்டு மீண்டும் வீராவை தேடி செல்கிறார். அப்போது அவரை பின்தொடரும் போலீஸ் வீராவை சுட்டுக்கொல்கிறது. வீராவாக விக்ரம், நடிப்பில் பிரமிக்க வைக்கிறார். முதல் காட்சியில் அவர்ஆற்றில் குதிக்கும் காட்சி அருமையாக படமாக்கப்படிருக்கிறது. முரட்டு உடம்பு, கோபம் நிறைந்த கண்கள், சோகம், வெறி என தனித்து நிற்கிறார் விக்ரம். சிங்கராசுவாக பிரபு, தேவ் ஆனந்தாக பிருதிவிராஜ், நளினியாக ஐஸ்வர்யாராய்என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசை மிரட்டுகிறது. சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு படத்தை அழகாக கொண்டு செல்கிறது. சந்தோஷ் சிவனின் அசாதாரண ஒளிப்பதிவு தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே ஜில்லிடும் அளவு தத்ரூபமான ஒளிப்பதிவு. பாரஸ்ட் கார்டாக கார்த்திக் காமெடி செய்கிறார். ஐஸ்வர்யாராய்முதல் முதலாக் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார். நித்தியானந்தா புகழ் ரஞ்சிதாகேரக்டரை இயக்குனர் சுருக்கி விட்டார் என்பது அவர் வரும் காட்சிகளின்எண்ணிக்கையிலேயே தெரிகிறது. விக்ரமின் தங்கையாக பிரியாமணி மீண்டும்ஒருமுறை சிறப்பான நடிப்பு. அரவாணி வேடத்தில் வையாபுரியும் நடித்திருக்கிறார். படத்திற்கு வசனம் எழுதி இருப்பவர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி. மேல்தட்டு மக்களுக்கு எதிரான வசனங்களில் அனல் பறக்கிறது. படத்தின் இறுதிகாட்சியில் விக்ரமின் நடிப்பு சூப்பர். பாடல்கள் போலவே ரகுமானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றது. இசைபோலவே எடிட்டிங்கில் சேகர் பிரசாத்தும் காட்சிகளை அருமையாக கோர்த்திருக்கிறார், திரைக்கதை வேகத்திற்கு இவருக்கு ஒரு ஒ.. போடலாம். பிரபு வெளுத்து வாங்கியிருக்கிறார், டைமிங் காமடியிலும் ஹீரோயிசத்திலும் தூள் கிளப்புகிறார், இப்படியான கதாபாத்திரங்களுக்கு இன்றைய ஒரே தெரிவு பிரபுதான். கார்த்திக்கிற்கு சொல்லிக்கொள்ளும் படியாக காட்சிகள் இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்தளவிற்கு பங்களித்திருக்கிறார். உடல்மொழி , வசன உச்சரிப்பு என்பவற்றில் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் ராவணனிலும் விட்டு வைக்கவில்லை, அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார். ‘உசுரே போகுதே’ கேட்கவும் ரசிக்கவும் வைக்கிறது. காட்சிகளோடு இணைந்து பின்னணி இசையும் பேசுகிறது. கிட்டத்தட்ட ஒரு முழு நிமிடத்திற்கு எந்த ஆரவாரமும் இல்லை! அதன் பிறகு, கார்த்திக் பாட ஆரம்பிக்கின்றார் - மனதில் தேக்கி வைத்துள்ள ஆசைகளையெல்லாம் அத்தனை அழகாக தன் குரலில் கொண்டு வருகிறார். வைரமுத்துவின் வரிகள் அற்புதம். நாயகியை அடைய நினைப்பது தர்மம் இல்லை, அடையவும் முடியாது என்று தெரிந்தும் பாடுபவர் ஏங்குவது போல அமைந்திருக்கிறது இப்பாடல். ஒரு பெண்ணின் ஹம்மிங்கோடு ஆரம்பித்து, கீஸ் சேர்ந்துகொள்ள, அனுராதா ஸ்ரீராமின் உச்சஸ்தாயியில் சக்கை போடு போட்டவாறே வருகிறாள் காட்டுச் சிறுக்கி! உடனே, ஷங்கர் மஹாதேவனும் சேர்ந்துகொள்ள, கால்கள் தாளம் போட ஆரம்பிக்கின்றன. இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் எல்லோருமே திரைத்துறையின் பெரியதலைகள். அவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு இப்படி ஒரு படத்தைஇயக்குவது தயாரிப்பது என்பதே சவாலான விஷயம்தான். இயக்குநர்மணிரத்னம் அதில் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

செவ்வாய், 18 மே, 2010

நகரத்தில் நடப்பவர்களுக்கு
நடக்கத் தெரிந்தால் மட்டும் போதாது நகர சாலைகளில்..
போக்குவரத்து நின்ற ஒரு நொடி அவகாசத்தில் சாலைகளின் குறுக்கே ஓடத் தெரிந்திருக்க வேண்டும்..
அவசரத்தில் யார் மீதேனும் மோதிவிட்டால் மன்னிப்புக்கேட்டு நிற்காமல் அலட்சியமாகக் கடந்திடுவோம்..
சாலையோரத்தில் உயிருடன் அல்லது இறந்து கிடப்பவர்கள் யாரென்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம்..
நடந்துபோகும் நம்மிடம் பிடிவாதமாகக் கைஎந்துபவர்களை நின்று திட்டினாலும் நேரம் வீணாகிவிடும்..
இறுதி ஊர்வலத்துக்கும் ஆம்புலன்ஸ் வண்டிக்கும் நகரப் போக்குவரத்தில் பாதி மனசோடு இடம் கொடுப்போம்..
மேற்கண்ட தகுதிகளின்றி நகரத்தில் நாம் நடந்தால் அன்னியரென்று விலக்கப்படுவது நிச்சயம்..........

சனி, 27 பிப்ரவரி, 2010

தங்க ரகசியம்
உலக நாடுகளிலேயே மிக அதிகமாக தங்கத்தை பயன்படுத்துகிற நாடாக நமதுநாடு திகழ்கிறது. IMF என்று அழைக்கப்படும் சர்வதேச நிதி நிறுவனம் மற்றும்அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளிடம் தங்கம் கையிருப்பு அதிகமாகஇருக்கிறது. அதே நேரத்தில் நமது நாட்டில் சாதாரண மனிதர்களிடம் கூட தங்கம்இருக்கிறது. இதனால் தங்கம் கையிருப்பு அதிகம் வைத்திருக்கின்ற மக்களைகொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. பெரும்பாலும் 22 காரட் தங்கத்தில்தான் விதவிதமான ஆபரணங்கள்செய்யப்படுகின்றன. தங்கத்தின் உற்பத்தி குறைந்த காலத்திலோ அல்லதுகிராக்கி அதிகம் ஏற்பட்டு சப்ளை குறைந்து போகும் நிலையில்தான் 8,9,10,12,14 காரட் தங்கத்தில் ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. நாம் உபகொயப் படுத்தும் உலோகம் எதுவானாலும் அதன் மதிப்பு என்பது 99.99 அல்லது 999 ஆகும். மீதி வேறு உலோகத்தின் கலவைதான். தங்கமும் இதற்குவிதிவிலக்கு இல்லை. அதனால்தான் அரசு வெளியிடுகிற தங்க பாளம், தங்கபிஸ்கட்டின் மீது 99.99 அல்லது 999 என குறிப்பிடப்படுகிறது. மீதி கலவைஉலோகம். இன்னொரு உலோகத்தை தங்கத்துடன் கலக்கும்போதுதான் அதைஉருக்கி நீட்டி தகடுகளாக்கி கண்கவரும் ஆபரனன்களாக மாற்ற முடிகிறது.
தங்கம் பற்றிய முக்கிய தகவல்கள்:
  1. தங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட தரம் 24 காரட்.
  2. அமெரிக்க டாலரின் மதிப்பில் வீழ்ச்சி, உள்நாட்டில் பண வீக்கம் அதிகரிப்பு, பங்குசந்தையில் சரிவு ஏற்படுகிறபோது தங்கம் விலை சர்ரென்று ஏறுமுகம் காணும்.
  3. அட்சய திருதியை நாளில்-அதாவது சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம்நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் குவியும் என்பது நம்பிக்கை.
  4. பத்தரை மாற்று தங்கம் என 24 காரட் தங்கத்தை போற்றினாலும் அது ஆபரணம்செய்ய உதவாது. மாற்று உலோகம் கலந்தால்தான் தங்கத்துக்கு சிறப்பு.
  5. தங்கத்துக்கு சிறப்பான மருத்துவ குணங்கள் உண்டு. வலது கை விரல்களில்தங்கம் அணிந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

சனி, 6 பிப்ரவரி, 2010

மிகப் பெரிய நகரம்
மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய நகரம் டோக்கியோ. இது ஜப்பான் நாட்டுத் தலைநகரம். இதன் மக்கள் தொகை தற்போதைய நிலவரப்படி 1 கோடியே 30 லட்சம். ஜப்பானின் 47 நிர்வாக அமைப்புகளில் ஓன்று டோக்கியோ. இது காண்டோ பிராந்தியத்தில் ஹோன் ஸீ தீவில் அமைந்து உள்ளது. டோக்கியோ மொத்த பரப்பளவு 2187(sq.km)சதுர கிலோமீட்டர்கள். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 8000 பேர் என்ற வகையில் மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த மாநகரமாக உள்ளது. ஜப்பானிய அரசு, அரச குடும்பம், அரசு மாளிகை ஆகியவற்றின் இருப்பிடமாக டோக்கியோ உள்ளது. உலகத்திலேயே மக்கள் வாழ்வதற்கேற்ற மூன்றாவது சிறந்த நகரமாக டோக்கியோ தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் உலகில் விலைவாசி மிகவும் அதிகமுள்ள நகரங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. இப்போது டோக்கியோ என்றழைக்கப்படும் இந்த நகரம் சென்ற நூற்றாண்டில் டோக்கேய் என்று அழைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் இரு பெரும் சீரழிவுகளை டோக்கியோ சந்தித்தது. 1923ல் ஏற்பட்ட பெரும் காண்டோ பூகம்பம் மற்றும் இரண்டாம் உலகப் போர்குண்டுவீசுகள். பூகம்பத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தனர். இரண்டாம்உலகப் போரில் 1944-1945 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில்ஏறக்குறைய பாதி டோக்கியோ நகரம் அழிந்தது. 2 லட்சம் பேர் வரைகொல்லப்பட்டனர். ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அணுகுண்டுவீச்சால் ஏற்பட்ட சேதங்களைக் கூட்டினால் ஏற்படக்கூடிய அழிவிற்குஇணையாகும் இது. இவ்வளவு சீரழிவு ஏற்பட்ட பின்பும் ஜப்பானியர்கள் சோர்ந்துபோகாமல் தங்களது அயராத உழைப்பால் டோக்கியோ நகரத்தை ஒரு மாபெரும்- அதே நேரம் அனைத்து வசதிகளும் நிரம்பிய அதி நவீன நகராக எழுப்பிக்காட்டினர். மக்கள் வாழத் தகுந்த மூன்றாவது பெரிய நகரமாகவும் மாற்றிக்காட்டியுள்ளனர்.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

டில்லி செங்கோட்டை
டில்லி என்றதும் நினைவுக்கு வருவது செங்கோட்டைதான். இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக் கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் முஹலாய மன்னர் ஷாஜகான்.
தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜகனாபாத்திற்கு(தற்போதைய பழைய டில்லி) ஷாஜகான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக்கட்டி முடிக்க 1638-48 வரை 10 ஆண்டுகள் ஆனது. செலவிட்ட தொகைஅப்போதைய மதிப்பிற்கு ஒரு கோடி ரூபாய். யமுனை நதிக் கரையில் ஒப்பிலாஅழகுடன் நிற்கும் செங்கோட்டை பாரசீக, ஐரோப்பிய, இந்தியக் கட்டடக்கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சர்யப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும்போற்றப்படுகிறது. டில்லிகேட், லாகூர் கேட் என இரு பெரும் நுழைவாயில்கள்உள்ளன. கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றிஅந்தப்புரங்களிலும் கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. திவான்--ஆம்எனப்படும் தர்பார் மண்டபம் பொது மக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில்அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காகஅமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.
ஜெனானா என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மகால், ரங் மகால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்டநீரூற்று புதுமையின் பதிப்பு. அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்டமோதிமஷ்திஜ் எனப்படும் பியர்ல் மஷ்திஜ் எனப்படும்(முத்து மசுதி) முழுவதும்சலவைக்கல்லால் கட்டப்பட்டதாகும்.
இவை தவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த நகார்-இ-பெஹிஸ்ட் என்றபகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும்வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி கனவுகளுக்கும்கற்பனைகளுக்கும் கூட கால்வாய் வெட்டி நனவாகிய முஹலாய மன்னர்கள் இதை சொர்க்கத்தின் நீரோடை என்றும் அழைத்துவந்தனர். நீரோடையை இன்றும்காணலாம். செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜகான் என்றாலும் அவருக்குப்பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது கண்டோன்மேன்ட்டாக(ராணுவ முகாம் மற்றும்குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

அடிப்படை கடமைகள் மற்றும் உரிமைகள்:
1950இல் நமது அரசியல் சாசனம் இயற்றிய போதே குடிமக்களின் அடிப்படைஉரிமைகளும் கடமைகளும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.. 1976 இல் 42 வதுசட்டத்திருத்தத்தின் மூலம் குடிமக்களின் அடிப்படை கடமைகளை அங்கம் 51-A மூலம் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது..
அடிப்படை கடமைகள்:
  1. அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்ளுதல். தேசியக்கொடி, தேசிய கீதத்திற்குமரியாதை செலுத்துதல்.
  2. விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்த உன்னத இலட்சியங்களை போற்றுதல்.
  3. இந்தியாவின் இறையாண்மையை ஏற்று, ஒருமைப்பாட்டையும் ஒன்றுபட்டஉணர்வையும் வளர்த்தல்.
  4. நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல்.
  5. ஜாதி, மத, இன, மொழி வேற்றுமைகளிடையே ஒற்றுமை கண்டுசகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டை காத்தல்.
  6. இந்தியாவின் பண்பாட்டு பெருமைகளை பேணிக் காத்தல்.
  7. சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல், ஏரி, குளம், கிணறுகளை மாசுபடாது காத்தல்மற்றும் வனம், வனவிலங்குகள், பறவைகள், உயிரினங்களை பாதுகாத்தல்.
  8. தொழில், விய்ஞானம், விவசாய ஆய்வுகளை பரப்புதல். மனித நேயம்வளர்த்தல்.
  9. பொதுச் சொத்துகளை பாதுகாத்தல். வன்முறைகளை தவிர்த்தல்.
  10. நாட்டு முன்னேற்றத்தில் அக்கறை காட்டுதல்.
  11. 6 வயது முதல் 14 வயதுவரை தம் பிள்ளைகளை கட்டாயமாகப் பள்ளிக்குஅனுப்புதல்.
அடிப்படை உரிமைகள்:
  1. சமத்துவ உரிமை
  2. சுதந்திர உரிமை
  3. சுரண்டலை தடுப்பதற்கான உரிமை
  4. சுதந்திரத்திற்கான உரிமை
  5. பண்பாடு மற்றும் கல்வி பற்றிய உரிமைகள்
  6. அரசியலமைப்பு வழித் தீர்வுகளுக்கான உரிமை...

சனி, 23 ஜனவரி, 2010

சிந்தனைகள்:
நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை கத்தி முனையில் நடப்பதை போல்கடினமானதுதான். எனினும் எழுந்திரு. விழித்துக்கொள். மனம் தளராதே, நீஅடைய வேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி. -சுவாமி விவேகனந்தர்.
சந்தோசமாக இருப்பதால் நாம் சிரிப்பதில்லை. சிரிப்பதால்தான் மகிழ்ச்சியாகஇருக்கிறோம். -வில்லியம் ஜேம்ஸ்

வெள்ளி, 22 ஜனவரி, 2010

BAJAJ PULSAR 135-REVIEW
150, 180, 220 என அதிகரித்துக்கொண்டே போன பல்ஷர் முதன்முறையாக சிசிகுறைந்து வெளிவந்திருக்கிறது!
நிறைகள்:
பல்சர் 135 என்ற பெயருடன் LS என்ற இரு எழுத்துகளும் சேர்ந்திருக்கிறது. LIGHT SPORTS என்பதின் சுருக்கம்தான் LS! DC power head lights என்பதால் பைக்கைஸ்டார்ட் செய்த பிறகுதான் Head lights ஒளிரும் என்கிற தொல்லை இல்லை! பல்சர் 135 LS 4-Stroke, 4-valves கொண்ட என்ஜினுடன் வெளிவந்திருக்கிறது. இதுமற்ற 2-Wheelerகளில் இல்லாத சிறப்பு அம்சம். 134.66CC என்ஜின் கொண்ட இதன் சக்தி 13.5BHP. என்ஜின் ஸ்மூத்தாக இருப்பதால்எவ்வளவு வேகமாக ஆக்சிலேட்டர் கொடுத்தாலும் எஞ்சினில் எந்தவித திக்கல்திணறல் இல்லை. LIGHT SPORTS என்பதற்கேட்ப இதன் எடையை அதிகமாககுறைத்திருக்கிறார்கள். இதன் எடை 122 கிலோதான். பர்பார்மன்ஸை பொறுத்தவரை PULSAR 135 PULSAR 150 க்கு இணையாகஇருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 108 கி.மீ. இதன் எடை குறைவாகஇருப்பதால் டிராபிக் நெருக்கடிகளில் வளைத்து நெளித்து எளிதாக ஓட்டமுடிகிறது. முன்பக்க டிஸ்க் பிரேக் பவர்புல்லாக இருக்கிறது.
குறைகள்:
புது பல்ஷரில் கிக் லிவர் இருக்கும் இடம் மிகவும் இடைஞ்சலாக வலது காலைஇடித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் பெட்ரோல் டேங்கில் 8 லிட்டர் மட்டுமேநிரப்ப முடியும்.
மேலும் விபரங்களுக்கு http://www.pulsar135ls.com

திங்கள், 11 ஜனவரி, 2010

நட்பு
வாழ்க்கை என்னும் விளக்கில் அன்பு என்னும் எண்ணை ஊற்றி பாசம் என்னும் திரியுடன் ஏற்றி வைத்த என் நட்பு எப்போதும் அணையாமல் ஒளி வீசும் ஏன் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்தது எங்கள் இதயம் ஜாதி மதம் இனம் கடந்து சாதனை படைத்தது நட்பு....